Wednesday, March 27, 2019

கார்கடல் வடிவம்




ஜெ

கார்கடல் பற்றி முழுமையாகத் தொகுத்து எவரேனும் எழுதுவார்கள் என நினைத்தேன். நாவலுக்கு ஒரு புற ஒற்றுமை உள்ளது. நான்கு கதைசொல்லிகள் வழியாக வேறுவேறு கோணத்தில் கதை சொல்லப்படுகிறது. துரோணரின் கதை மையமாக அமைந்துள்ளது. கர்ணனின் வருகையில் தொடங்கி அவனிடமே முடிகிறது

ஆனால் கதையின் மைய ஓட்டம் என்ன? தந்தை மகன், ஆசிரியர் மாணவர் முரண்பாடுகள் நாவல் முழுக்க உள்ளன. அபிமன்யூவும் கடோத்கஜனும் லட்சுமணனும் துருமசேனனும் கொல்லப்படுகிறார்கள். ஏராளமான மரணங்கள். ஒன்றோடொன்று அனைத்தையும் இணைத்து ஒரு மொத்தமான சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள கொஞ்சம் கடினமாகவே உள்ளது

சரவணன்