Wednesday, March 13, 2019

உருமாற்றம்


அன்புள்ள ஜெ

துரோணரின் உருமாற்றமும் அவர் திருஷ்டதுய்ம்னனை நடத்தும் விதமும் பதறச்செய்கின்றன. குணமாற்றம் நிகழும்போதுதான் நாம் உண்மையில் மனிதர்களை அறிகிறோம். குணமாற்றம் நிகழ்வது மனதுக்குள் நிகழும் ஒரு இக்கட்டுநிலையால்தான். துரோணர் ஏன் அப்படி மாறினார் என்பது அவருடைய மொத்த வாழ்க்கையையும் கருத்தில்கொண்டு புரிந்துகொள்ளப்படவேண்டிய ஒரு நிகழ்ச்சி. ஆனால் அதை புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ராஜசேகர்