Thursday, March 28, 2019

போரின் கதி




அன்புள்ள ஜெ

மகாபாரதத்தின் 14 ஆவது நாள் போர்தான் உக்கிரமானது. கார்கடலின் பெரும்பகுதி அந்த ஒருநாள் போர்தான். அதில்தான் அத்தனைபேர் இறந்து போகிறார்கள். அவ்வளவு நிகழ்வுகள். இது நான் வாழ்க்கையிலும் பார்த்ததுதான். எல்லாமே புகைந்து புகைந்து நடந்துகொண்டிருக்கும். பெரிதாக ஒன்றும் நடக்காமல் இப்படியே முடிந்துவிடும் என்று தோன்றும். ஆனால் சரசரவென எல்லாம் நிகழ்ந்து முடிந்துவிடும். அதன்பின்னர் நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் . இப்போது கார்கடலை நான் மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கிறேன். ஒட்டுமொத்தமாக வாசித்தால்தான் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன்

சுரேஷ்குமார்