Wednesday, December 31, 2014

இடைநாழி



ஜெ

ஒரு இடைவழியில் நடந்து இந்தப்பக்கம் வருவதற்குள் துரியோதனன் எல்லாவற்றையும் தெளிவாக உணர்ந்துவிடும் அந்த இடம் மிக நுட்பமானது

ஏனென்றால் அவனுக்கு முன்னரே தெரியும். மனசில் ஆழத்தில் இருந்தது. கனவிலேயே எல்லாம் வந்துவிட்டது. யானையின் எலும்பு இல்லை என்று கனவு சொல்லிவிட்டது. அதை மூளைக்கு எட்டாமல் ஒளித்துவைத்திருந்தான். கர்ணன் டிரிக்கர் செய்ததும் மனசிலிலிருந்து மூளைக்குச் செய்திபோய்விட்டது. அந்த இடம்தான் அந்த இடைவழி

அந்த மாதிரி இடங்கள்தான் இந்நாவலை வேறு ஒரு இடத்துக்குக் கொண்டுசெல்கின்றன. சில இடங்கள் நேராக இருக்கின்றன. சில இடங்கள் மிகவும் பூடகமாக உள்ளன. இந்த மர்ம விளையாட்டுத்தான் என்னை மிகவும் கவர்கிறது

குண்டாசியின் மனசு மாறிக்கொண்டிருக்கும் விதமும் அதேபோலத்தான். முதலில் மனம் கலங்குகிறான். பிறகு ஆறுதல் அடைகிறான். அதன்பிறகு குற்றவுணர்ச்சியால் குடிக்கிறான்

எனக்கு மிகவும் கூர்மையாகப்ப்பட்ட இடம் கர்ணனின் நடத்தை. நாம் நினைக்காத ஒன்று அவனிடம் இருக்கிறது. அதனால்தான் அவன் குண்டாசியை போய் பார்க்கிறான். பாண்டவர் சாகவில்லை என்று அவனுக்குத்தெரியும். அதனால் அமைதியாக இருக்கிறான். செத்ததாகத் தெரிந்திருந்தால் வேறுமாதிரி இருந்திருப்பான்

சுவாமி