Wednesday, December 31, 2014

குணச்சித்திரமும் ஆளுமையும்



ஜெ,

பிரயாகையின் கதாபாத்திரங்கள் எல்லாமே மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் குணச்சித்திரங்கள் மாறுவதே இல்லை. இந்த ஆச்சரியம்தான் ஒரு பெரிய புனைவிலக்கியத்தில் கவனிக்கப்படவேண்டியது என்று தோன்றுகிறது. கர்ணன் திரும்பி வரும்போது கொஞ்சம் மாறியிருக்கிரான். துரியோதனன் பீமன் செத்துப்போன பிறகு மாறியிருக்கிறான். இந்த மாற்றங்கள் எல்லாம் நம்பமுடியக்கூடியவையாகவே இருகின்றன. காரணம் அந்த மாற்றம் அவர்களின் பெர்சனாலிட்டியில்தான் நடக்கிறது. பெர்சனாலிட்டி மாறிவது இல்லை. அப்படியேதான் இருக்கிறது

அதேசமயம் எவருக்கும் பேச்சு, உருவம் அல்லது வேறுவகை அடையாளங்களில் கிளீஷேக்கள் எதையும் அளிக்கவும் இல்லை. இந்த மாற்றத்தில் முக்கியமானதாக எனக்குத் தோன்றியது குண்டாசியின் மாற்றம்தான். அதைப்போல வருத்தமான விஷயம் வேறு கிடையாது. ஆனால் நாம் வாழ்க்கையிலே அதைப்போல பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்

நீலம் வாசித்து ரொம்பநாள் பிரயாகை வாசிப்பதை தள்ளீப்போட்டேன். கடந்த ஒரு மாசமாக உட்காந்து வாசித்து நெருங்கிவிட்டேன்

அகிலா