Thursday, December 25, 2014

குருகுலம்




அன்புள்ள ஜெயமோகன் சார்,

வெண்முரசு  நாளுக்கு நாள் என்னை முழுமையாகவே உள்ளே இழுத்து கொள்கிறது ,  எதோ ஒரு குருகுல வாசம் போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புரிதல்,  
அடுத்த 10 நாட்களுக்கு, நானும் காயத்ரியும்,  எங்களுடைய குருவின் ஆஸ்ரமமான {BIHAR SCHOOL OF YOGA} பீகாருக்கு, குருவுடன் தங்க செல்கிறோம்,  எனக்கு இப்போதே தெரிந்து விட்டது, அடுத்த 10 நாட்களும், பயணம் முழுவதும், எங்களை வெண்முரசு தான் நிரப்பபோகிறது என்று.

கோடானுகோடி நன்றிகள், 

நான் கடந்த 8 வருடங்களாக சுவாமி சத்யானந்தரின்,{ சுவாமி சிவானந்தரின், முதன்மை சீடர்களில் ஒருவர்.}   குருகுல மரபில் தொடர்கிறேன்,  என் மகளுக்கும், அந்த தொடர்பை ஏற்படுத்தும், முயற்சியே இந்த பயணம்.
இந்த வகையில்,வெண்முரசின்,  அக்னிவேசரின், துரோணரின், பரசுராமரின், பால்ஹிகரின் , குருகுல மரபுகள், எங்களுக்கு ஒரு மெய்சிலிர்க்கும், அனுபவமே,, 

என் குருநாதரோடு என் குருநாதரோடு வெண் முரசை பகிர்ந்துகொள்ள முயல்வேன். 

10 நாட்கள் கழித்து மீண்டும் முரசில் இணைவோம்.


நன்றி....

About our tradition::- www.biharyoga.net   andwww.yogamag.net