Wednesday, December 31, 2014

மூன்று முகங்கள்



ஜெ

கிருஷ்ணனை ஒரேசமயம் மூன்று கோணங்களில் அறிமுகம் செய்கிறது வேட்டைவழிகள் பகுதி

1. யாதவ அரசன். அவன் ஒரு பெரிய பேரரசை உருவாக்க நினைக்கிறான். ஆகவே நகரத்தை உருவாக்குகிறான். வலுவான திருமண உறவுகளை உருவாக்க நினைக்கிறான். அவனை மற்றவர் பயப்படுகிறார்கள் -கர்ணன் பார்க்கும் கிருஷ்ணன்

2. அரசியல் ஞானி. விளையாட்டாகவே அரசியலை ஆடி எப்போதும் ஜெயிக்கக்கூடியவன். இது பலராமரின் வருகை வழியாக பீஷ்மர் புரிந்துகொள்வது

3. விதுரர் புரிந்துகொள்வது முழுமையான கிருஷ்ணன். புன்னகையுடன் வந்து புன்னகையுடன் லீலை புரிந்து திரும்பிச்சென்றவன். விதியையும் மக்களையும் நன்றாக அறிந்தவன்

சண்முகம்