Monday, December 29, 2014

துரியோதனனை விரும்புதல்...

ஜெ



துரியோதனனை எப்படியோ விரும்ப ஆரம்பித்துவிடுகிறோம் என்பதுதான் வெண்முரசின் பெரிய வெற்றி. அவன் ஒரு டிராஜிக் ஹீரோ என்று தோன்றுகிறது. பீமன் உயிருடன் இருக்கிறான் என்று தெரிந்ததும் அவன் ஆயுதப்பயிற்சி எடுக்க ஆரம்பிக்கும் இடம் அவனைப்பார்க்க பரிதாபாகவே இருக்கிறது

அவனுடைய குணச்சித்திரம் அதிக நுட்பமான அறிவில்லாத அகங்காரம் கொண்டவனாகவே இருக்கிறது. எதையும் நுணுகி ஆராய முடியவில்ல  ஆகவே மாமனின் கையில் பாவையாகவே இருக்கிறான். அவன் தீமை நிறைந்தவன் ஆனால் சகுனியை தீமையின் வடிவமாகக் காட்டியதும் அவன் நமக்கு பிரியமானவனாக ஆகிவிடுகிறான். வியாசரின் நோக்கமே அதுதானோ என்னமோ

சத்யநாராயணன்