Saturday, December 27, 2014

கொல்பவன்



ஜெ

கர்ணனின் வருகையின் பொருத்தம் ஆச்சரியப்பட வைத்தது. கடோத்கஜன் வந்து முடிந்ததுமே கர்ணனின் நினைப்பாகவே இருந்தது இந்த கருப்புக்குழந்தையை ஒருநாள் கர்ணன் அல்லவா கொல்லப்போகிறான் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். கர்ணனின் கதையில் மீண்டும் தொடங்கியபோது படபடப்பாக இருந்தது

கர்ணன் திரும்பிவரும்போது இன்னும் அழுத்தமானவனாக இருக்கிறான். இப்போது அவன் பரசுராமரைச் சந்தித்து கல்வியும் சாபமும் பெற்று மீண்டும் வந்திருக்கிறான் என்று நினைக்கிறேன். அந்த அடக்கமும் அழுத்தமும் கோபமும் இருக்கின்றன

கர்ணனின் கதைதான் இனி மெலேஎமேலே விரியும் என்று தோன்றியது

சாமிநாதன்