Tuesday, December 30, 2014

கர்ணனும் அருணனும்



ஜெ

இன்றைக்கு பிரயாகையின் ஒரு அத்தியாயத்தை வாசித்தேன். குந்தி தன் பிள்ளைகளுக்கு அருணனின் கதையைச் சொல்கிறாள். அருணனும் கர்ணனும் ஒன்றாகக்கூடிய அந்த மேஜிக் அழகாக அமைந்திருந்தது. அருணனைப்போலவே முழுசாக வளராமலேயே கர்ணனும் வந்துவிட்டன் ஆனால் ஒளியுடன் இருக்கிறான். அவனுடைய பிரச்சினையே அதுதான் என்று தோன்றியது.

கர்ணனைப்பற்றிய எல்லா ஒளிமிக்க வர்ணனைகளிலும் அவனுடைய கருப்பும் வந்துகொண்டே இருக்கிறது இல்லையா? பிறந்ததுமே அம்மாவை சாபம்போட்டுவிட்டுச் செல்லக்கூடிய அருணனின் கதாபாத்திரம்தான் அது

இந்த வகையான ஒரு கற்பனையை இதற்கு முன் வாசித்ததில்லை. மிகச்சரியாக குந்தி - வினதை, காந்தாரி - கத்ரு, ஆயிரம் நாகங்கள் - நூறு கௌரவர் எல்லாமே சரியாக வருவதைப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது

ப்ரியா