Thursday, December 11, 2014

குந்தியும் வினதையும்



திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
குந்தியின் வாயிலாக கத்ரு வினதையின் மனநிலையை விளக்கியிருப்பது அருமை. பிரயாகை பல தகவல்களைக் கொண்டு வருவதைக் கண்டு, பிரயாகை 1 முதல் 50 வரை குறுகிய காலத்தில் படித்துவிட்டேன். 

மழைப்பாடலில் பாதி, வண்ணக்கடல், நீலம் ஆகியவற்றைப் படிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். நேரத்தை ஒதுக்கிப் படிக்க வேண்டும் என்றிருக்கிறேன்.

மஹாபாரதக் கதைகளில் ஒன்றுகூட விடாமல் கொடுத்துவிடுவீர்கள் என்ற ஆவல்மிக்க எதிர்பார்ப்பால் உள்ளம் நிறைகிறது. மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தைக் கொடுத்து வரும் உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றி.