Friday, January 30, 2015

குகைமாளிகைகள்

[ஜோர்டான் குகைமாளிகை. பெரிதாக்க படத்தின்மேல் சுட்டவும்]

ஜெ சார்

வெண்முரசு முதற்கனல் நாவலில் சிகண்டி வடமேற்காகப் போய் சிபிநாட்டைப்பார்க்கிறான். அங்குள்ள அரண்மனைகள் எல்லாமே பெரிய செம்மண் பாறைகளைக்  குடைந்து செய்யப்பட்டவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட நகரங்கள் உண்டா? இன்றைக்கும் அவை இருக்கவேண்டும் அல்லவா?

வெண்முரசு நாவலில் வரும் இந்தவகையான நகரச்சித்திரங்கள் என்னை பெரிய கனவுலகுக்குள் கொண்டுசெல்கின்றன. எங்காவது இருந்தால் சாவதற்குள் எப்படியாவது போய் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அதனால்தான் கேட்கிறேன்

சாரங்கன்


அன்புள்ள சாரங்கன்,

அந்நிலம் இன்று பாகிஸ்தானில் உள்ள சிபி மாவட்டம். இன்றும் அங்கே குன்றுகளைக் குடைந்து செய்யப்பட்ட அற்புதமான மாளிகைகள் பல உள்ளன

பொதுவாக பாலைவனப் பாறைகள் மென்மையானவை. ஆகவே அவற்றைக் குடைந்து குகைகளை அமைப்பது 5000 வருடங்களாக நிகழ்கிறது. குகைமாளிகைகளாலான நகரங்கள் ஈரானிலும் ஜோர்டானிலும் பல உள்ளன

ஜெ