Friday, January 30, 2015

சாட்சி நதி


[பெரிதாக்க படத்தின்மேல் சொடுக்கவும்]
ஜெ

ஒரு வழியாக நேற்றி பிரயாகையை முடித்தேன். ஏகப்பட்ட பிராஜக்டுகள். [சிக்கல்களைப்பற்றி எழுதியிருந்தேனே] அங்கே இங்கே என்று அலைச்சல். பல அத்தியயாங்களை விமானநிலையத்திலும் விமானத்திலும் வைத்துத்தான் வாசித்தேன்.

பிரயாகையை முடிக்கும்போது ஓர் எண்ணம் வந்தது. அதாவது கங்கைதான் இந்த ஒட்டுமொத்த காவியத்துக்கும் மையம் என்று தோன்றியது. ஆரம்பம் முதல் கங்கை எல்லா நாவல்களிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

நேரடியாகப்பார்த்தால் கங்கைக் கரையில்தான் அத்தனை நாடுகளும் இருக்கின்றன. அவர்களுக்குள்ளே mode of transportation கங்கைதான். ஆகவே கங்கை வந்தபடியேதான் இருக்கும். பயணம் எல்லாம் கங்கையிலேதான்

ஆனால் இன்னொருவகையில் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு கங்கை ஓடிக்கொண்டே இருப்பதுபோலத் தோன்றுகிறது. கங்கையை ஒரு பெரிய காலப்பிரவாகமாக எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது

ஷோலக்கோவின் And Quiet Flows the Don வாசிக்கையில் வயசு 16. இப்போதும் அந்த நதிதான் முக்கியமானதாகத் தோன்றுகிறது. அந்த நதியின் கரையிலேதான் ஒரு இதிகாசம் போல அத்தனைபோர்களும் நடந்து முடிகின்றன.இந்நாவலில் கங்கை அந்த நதியைப்போல இருக்கிறது. வெண்முரசு என்பதற்குப்பதில் கங்கையை வைத்துக்கூட ஏதாவது தலைப்பு வைத்திருக்கலாம்.

ஜெயராம்