Tuesday, January 20, 2015

பீமனின் துயரம்



குண்டாசியின் கடைசி வார்த்தைகள் சொல்லொன்னா துயரத்தை தருகிறது. மீண்டும் ஓட்ட முடியாத உடைந்த பானை சில்லுகள். குண்டாசிக்கு தெரிந்திருக்கும். அவன் எட்டு வருடங்கள் அழுதுவிட்டான். அவன் நிலைமை பரிதாபம்தான். அனால் பீமனின் நிலை !!. அவனுக்கு இன்னொரு குண்டாசி எங்கிருந்து கிடைப்பான் ? அப்படி கிடைத்தாலும் அவனால் நம்பிக்கையுடன் அந்த அன்பை செலுத்தத்தான் முடியுமா ? என்ன ஒரு வெறுமை அவனில் குடியேறி இருக்க வேண்டும் !! ஒருவேளை கடோத்கஜன் பீமனை ஓரளவேனும் மீட்டிருக்காவிட்டால் அவன் அரக்கனாகவே ஆகியிருப்போனோ ? 
நம்பிக்கை துரோகம் போல் உறவை பிளக்கும்   கொடிய ஆயுதம் வேறெதுவும் உண்டா !!

கோகுல் சம்பத்