Saturday, January 31, 2015

நதிக்கரை நகர்கள்



ஜெ

வெண்முரசின் காலகட்டத்தில் நீங்கள் காட்டும் பெரும்பாலான நகரங்கள் நதிகளின் கரைகளில் அமைந்திருக்கின்றன. அஸ்தினபுரி மட்டும் சற்று தள்ளி அமைந்திருக்கிறது. காம்பில்யம் சத்ராவதி எல்லாமே நதிக்கரை நகரங்கள்தான். இதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்குமா?

சிவராஜ்


அன்புள்ள சிவராஜ்

தமிழகத்தில் இன்றுள்ள நகரங்களும் பெரும்பாலும் அனைத்துமே நதிக்கரைகளில் அமைந்தவைதானே? ஒரு நகரத்தின் முதன்மைத்தேவையான குடிநீரை நதிகளே அமைக்க முடியும்

மேலும் நதிகள் தான் அன்றைய ‘நெடுஞ்சாலைகள்’ நதிவழி போக்குவரத்தே அடிப்படையானது. ஆகவே வணிகமையங்கள் நதிக்கரைகளில் அமைந்தன. அவை நகரங்கள் ஆக மாறின

ராணுவரீதியாகவும் நதிகள் முக்கியமானவை. பெரும் படைகளை தளவாடங்களுடன் விரைவில் கொண்டுசெல்ல சிறந்த முறை நீர்வழிப்பாதைகள்தான்

ஜெ