Friday, January 30, 2015

இந்திரனின் அலைக்கழிப்பு



ஜெ,

பிரயாகையை இப்போதுதான் முடித்தேன். நடுவே விட்டுப்போனதை எல்லாம் சேர்த்துக்கொண்டு வாசித்துமுடிக்க இத்தனைநாட்கள் ஆகிவிட்டன.

இந்த நாவலில் எனக்கு முக்கியமாகப் பட்டது அர்ஜுனனின் நிலையழிந்த நிலைமைதான். அவன் துரோணரிடம் போகும்போதே தத்தளிப்பு கொண்டவனாகத்தான் இருக்கிறான். இப்போது இன்னும் அதிக தத்தளிப்புடன் இருக்கிறான்

நம்முடைய புராணங்களில் இந்திரனை அப்படித்தான் சொல்லியிருக்கிறது. இந்திரன் பெண்களை தேடிப்போனபடியே இருக்கிறான் என்றுதான் நமக்குத்தெரியும். அது மட்டும் அல்ல அவன் வெவ்வேறு ரிஷிகளையும் அரசர்களையும் சென்று கலைத்துக்கொண்டே இருக்கிறான். புராணங்களில் அதிக சாபம் வாங்கியது இந்திரன் தான்

இந்த இந்திரனுடைய அம்சம் எப்படியெல்லாம் அர்ஜுனனை ஆட்டிவைக்கிறது என அற்புதமாகச் சொல்லியிருக்கிறது பிரயாகை. அதெல்லாம் அடங்கி அவன் எங்கே நிறைவை கொள்கிறான் என்பதையே மகாபாரதத்தின் முக்கியமனா கதையாக நான் நினைக்கிறேன்

சிவசுப்ரமணியம்