Saturday, January 31, 2015

துணைவழிகள்



ஜெ சார்

முதற்கனலைத்தான் இன்னும்கூட வாசித்துக்கொண்டிருக்கிறேன். அற்புதமான அனுபவமாக இருக்கிறது. குறிப்பாக மகாபாரதத்திலே உள்ள துணைக்கதைகளை மையக்கதைகளுடன் இணைத்திருப்பதைச் சொல்லலாம். மகாபாரத மூலத்தை நான் வாசித்திருக்கிறேன். அதில் துணைக்கதைகள் உள்ளே வருவதற்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கும் அவ்வளவுதான். மற்றபடி அந்தக்கதை மையக்கதையிலே ஒருவகையான அர்த்தத்தையும் அளிக்காது. அது செருகப்பட்டதுபோலத்தான் காணப்படும்

முதற்கனல் நாவலில் எல்லா கதாபாத்திரங்களும் தெளிவாகவே அந்தக்கதைகளுடன் மறைமுகமாகச் சம்பந்தபப்டுகின்ரன. அந்தக்கதாபாத்திரங்களின் மனசின் ஆழத்தை அந்தக்கதைகள் வழியாகப்புரிந்துகொள்ளமுடிகிறது. குறியீடாக அந்தக்கதையைக் கொண்டுதான் அந்தச்சந்தர்ப்பத்தையும் மனநிலைகளையும் குணச்சித்திரங்களையும் விளக்கியிருக்கிறீர்கள் என்று தெரிந்தது. அந்தக்கதைகளை கொஞ்சம் ஆழமாக யோசித்தால் மையக்கதை விரிவாகிக்கொண்டே செல்கிறது

குறிப்பாக தாட்சாயணி பற்றிய கதை. அம்பையைப்புரிந்துகொள்ள அந்தக்கதை மாதிரி சிறந்த குறிப்பே வேறு கிடையாது

வெண்முரசு நாவலின் சிறப்பு என்றால் இதுதான் என்று சொல்லத்தோன்றுகிறது


அருண் பிரபு சென்னை