Saturday, January 17, 2015

ஓவியங்கள்

ஜெ



வெண்முரசு கதைத் தொடரில் சண்முகவேல் வரையும் ஓவியங்கள் மிகச்சிறப்பானவை. வண்ணங்களும் வடிவங்களும் அந்தக்காலத்தையே கனவிலே கொண்டுவருகின்றன

அதேபோல இந்த வெண்முரசு விவாதம் தளத்தில் கடிதங்களுக்கு நீங்கள் போடும் படங்களும் முக்கியமானவை. இணையத்தில் இருந்து தேடி எடுத்துத்தான் போடுகிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் எத்தனை படங்கள். மகாபாரதம் பற்றிய சித்திரங்கள். கோட்டோவியங்கள். சிற்பங்கள். சுவரோவியங்கள். துணி ஓவியங்கள். நடனங்கள். நாடகங்கள். டிஜிட்டல் ஆர்ட் படங்கள்

பெரிய கனவு. மகாபாரதம் எப்படி நமது மனதில் பெரிய கனவாக இருக்கிறது என்பதை இவை காட்டுகின்றன.

சிவா ஆர்