Wednesday, January 28, 2015

துரோணரின் வீழ்ச்சி



ஜெ,

வெண்முரசில் அப்படியே கைவிடப்பட்ட கதாபாத்திரம் என்றால் துரோணர்தான் . முந்தைய வண்ணக்கடல் நாவலிலே அப்படி ஒரு ஞானியாக எழுந்து வந்தார். இந்த நாவலிலே அப்படியே சுருங்கி ஒரு சின்ன மனிதனாக ஆகி விட்டார்

அவரை அப்படி ஆக்கியது  என்ன என்று பார்த்தால் பிள்ளைப்பாசம் என்று தோன்றும். அது இல்லை ஈகோ தான் . தான் இன்னதாக இருக்கவேண்டும் என்ற ஆசை. அப்படிக் காட்டிக்கொள்ளும் தன்முனைப்பு

அது அவரை அழித்துவிட்டது. பீஷ்மரின் ஆயுதசாலையில் துரோணரைப்பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. என்ன வாழ்க்கை என்று சொல்லத்தோன்றியது

கணேஷ் திருமூர்த்தி