Wednesday, January 28, 2015

அலையும் அசைவின்மையும்




ஜெமோ சார்

வெண்முரசு பிரயாகை வாசித்து முடித்ததும் மீண்டும் ஒரு முறை ஆங்காங்கே வாசித்தேன். இந்தவகையான நாவல்களில் கதையோட்டம் நம்மை இழுத்துவந்துவிடுகிறது. ஆனால் கதை முக்கியமல்ல. குறியீட்டமைதிதான் முக்கியம் என்று சொல்லியிருந்தீர்கள். அந்த எண்ணம் வந்தது. இந்த நாவல் முழுக்க தொடரக்கூடிய விஷயம் நிலையின்மைதான். அர்ஜுனன் பீமன் திரௌபதி தருமன் எல்லாருமே நிலையழிந்து அலைக்கழிந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தலைக்குமேலே துருவ நட்சத்திரம் நிலையாக அமைதியாக இருக்கிறது. அதிலிருந்து ஆரம்பித்து அதை வந்துசேரும் நாவலின் கட்டமைப்பு திகைக்கவைக்ககுடியதாக இருந்தது

ரகுநாதன்