Thursday, January 29, 2015

புல்தெய்வம்




அன்புள்ள ஜெ,

வண்ணக்கடல் - அரசப்பெருநகர் துரோணரை வாசித்தது மிகத்தீவிரமானதொரு அனுபவம். மனம் இத்தனை தீவிரம் கொள்ளும் என்று நினைத்ததில்லை. துரோணர் - குசை நிகழ்விற்குப் பிறகு இளநாகன் வருகிறபோது, மனதை ஆழத்திலிருந்து பிடுங்கி எடுத்து சாதாரணங்களின் நிகழ்வெளியில் வீசப்பட்டது போல, மனதில் ஒரு தவிப்பு. துரோணர் தர்ப்பையும் கைவிட்டது என்ற போது அவர் தனிமையின் துயரம் என்னுள் கண்ணீரைக் கிளப்பிவிட்டிருந்தது.  
வாசித்தவனின் உணர்வுநிலை இப்படி என்கிற போது, எழுதிய உங்கள் மனநிலையை நினைத்துகொண்டிருக்கிறேன். அத்தனை தீவிரத்திலிருந்து எவ்வாறு சாதரணமாக இளநாகனுக்கு வரமுடிந்தது (அடுத்த அத்தியாயத்தில்) உங்களால்?   

நன்றி,
வள்ளியப்பன்.


அன்புள்ள வள்ளியப்பன்

பலசமயம் இசை வழியாகவே அடுத்த மனநிலை நோக்கிச் செல்கிறேன். அது ஒரு பெரிய சவால்தான்

ஜெ