Monday, January 26, 2015

காமினி



ஜெ,

காளியின் உருவம் என்ற அளவிலே நீங்கள் திரௌபதியை சொல்லிச்செல்கிறீர்கள் என்றாலும் என்னுடைய மனத்தில் வேறு ஒரு சித்திரம்தான் வந்துகொண்டே இருக்கிறது. அதை அழிக்கவே முடியவில்லை. ஐந்துவகையான காமத்தை அடைந்த ஒரு பெண். ஒன்று காமமே இல்லாத பார்வைகொண்ட அறம் கொண்டவனாகிய தருமன். மறுபக்கம் காமத்திலே கிடக்கும் பெண்பித்தனாகிய அர்ஜுனன்

இன்னொருவன் உடலே வடிவமான பீமன். ராட்சதன். மறுபக்கம் சின்னப்பையனாகிய சகதேவன். இன்னொரு பையன் நகுலன். இப்படி ஐந்து காமம்

அதோடு அந்தக்காமம் போதாதோ என்று தோன்றும்படியாக மேலும் ஒருவன் . இழந்தகாதலன். கர்ணன். ஒரு பெண்ணுக்கு எவ்ளவு வகையான ஆண்கள் வருவார்களோ எல்லா ஸ்பெசிமனும் பாஞ்சாலிக்குக் கிடைக்கின்றன. அவள் அவர்களை எப்படி கையாளப்போகிறாள். அவள் மனம் என்ன என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக்கோணத்திலேதான் யோசிக்கத் தோன்றுகிறது

ராஜ்


அன்புள்ள ராஜ்

காமபூரணி என்பதும் காளியே

ஜெ