Saturday, January 31, 2015

குந்தியின் தேர்வு



அன்புள்ள ஜெ சார்,

குந்தியின் தேர்வு 

இடும்பியை குறித்து குந்தி கிழே சொன்ன மொழிகளுக்குப்பின் , பீமனை  இடும்பியிடமிருந்து பிரித்து வருகையில், எனக்கு குந்தியின் மனதில் எந்த மாதிரியான எண்ண ஓட்டங்கள் உள்ளன என்பதை அறிய சற்று தடுமாற்றமாகவே இருந்தது, 

“சற்றுமுன் அந்தப்பெண் கண்களில் பொங்கி வழிந்த பெருங்காதலுடன் என்னருகே வந்தபோது நான் முதற்கணம் பொறாமையால் எரிந்தேன். பெண்ணாக அதை நான் மிக அண்மையில் சென்று கண்டேன். ஒருகணமேனும் அப்பெருங்காதலை நான் அறிந்ததில்லை” என்றாள் குந்தி. தொடர்பில்லாமல் சித்தம் தாவ, “சற்றுமுன் நீ சொன்ன சொற்களின் பொருளென்ன என்று என் அகம் அறிந்தது. ஆம், நான் தன்முனைப்பால் நிலையழிந்தேன். என் இடத்தை மீறிச்சென்று விட்டேன். என்னை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக எண்ணிக்கொண்டேன்…” என்றாள்

பின்பு ஒரு புரிதல் வந்தது, 

தனக்கு வரும் மருமகளும் தன்னை போல் ஐந்து பேரையும் இணைத்துக்கொள்ளும் சக்தியாக இருக்கும் பட்சத்தில், ஒருவகையில்,, தன்னுடைய வாழ்க்கைக்கான நியாயப்படுத்தும், செயலாகவே இருக்கும் என்று குந்தி எண்ணி  இருக்கலாம் .  

அந்த வகையில் குந்தியின் சரியான தேர்வு திரௌபதி தான் என்றும், இனி யாருடைய இழி மொழிகளுக்கும் ஆளாக மாட்டாள் என குந்தி நம்புவதாகவும், புரிந்தது.

அன்புடன்
சௌந்தர்..G