Tuesday, January 27, 2015

காளிகோயில்




அன்புள்ள ஜெமோ

திரௌபதியை மூலவிக்ரகமாகக் கொண்ட ஒரு கோயில் என்றுதான் பிரயாகையைச் சொல்லவேண்டும். அந்த தெய்வம் எப்படி அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது, எப்படி அது எழுந்தது என்று சொல்லும் ஒரு புராணம் அது.

சண்டிகை அதன்பிறகு ஐந்து தேவிகள் எல்லாமே அதன் அர்ச்சாவதாரங்கள் போல. அந்தத் தெய்வத்தினுடைய உத்சவம் கடைசியில் வருகிறது. கூடவே பெருந்தோழி. கடைசியில் கல்யாணக்காட்சி முடிந்து  மாயானக்கொள்ளையில் முடிகிறது.

யோசித்துப்பார்த்தால் எல்லாமே சரியாக இப்படி அமைந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. திட்டமிட்டிருக்க மாடீர்கள். ஆனால் நமது மனசு இப்படித்தான் வேலைபார்க்கும் என்று நினைக்கிறேன்

அம்மனின் முன் சாதாரணமனிதர்கள் அவள் அருளைப்பெறுவதற்காக ஆடும் ஆட்டங்கள் கூட அலகு குத்தி காவடி எடுத்து போடும் சித்திரவதைகளைப்போலத்தான் இருந்தன

அம்மன் அனல் வடிவானவள். அக்னிகிரீடம் சூடி கோயில் கொண்டவள். உக்ர-சாந்த ரூபிணி

சுவாமி