Tuesday, January 20, 2015

பிரயாகை முடிவு




பிரயாகை இன்றுடன் நிறைவடைந்தது.  திரௌபதியின் திருமணத்துடன் முடிக்க எண்ணியிருந்தீர்கள் போல. சட்டென முடிந்துவிட்டதுபோல ஒரு பிரமை. நான் ஹஸ்தினாபுரத்தில் பாண்டவர்கள் நுழைவதையும், திருதராஷ்ட்ரர் அவர்களைத்தழுவிக்கொள்வதுவரையிலுமாகச் செல்லும் என எண்ணியிருந்தேன். அந்தக் கற்பனையும், அதில் எந்தெந்த பகுதிகளில் உங்கள் வர்னனை சிறப்பாக இருக்கும் என்றெல்லாம் எண்ணியிருந்தேன். பிரயாகையின் உச்சமாக பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்திற்கு பிறகு திருதராஷ்டிரரிடம் ஆசிபெறும்போது நடக்கும் உரையாடல்கள் இருக்கும் என்று நினைத்தேன். :)

அடுத்த தொடருக்கு காத்திருக்கிறேன்.

அன்புடன்

ஜெயக்குமார் சீனிவாசன்

அன்புள்ள ஜெயக்குமார்,

ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு வடிவத்தை முன்னதாகவே நினைத்திருப்பேன். ஆனால் எழுதும்போது அது தானாகவே வளர்ந்து முடிவுக்கு வந்துவிடும்

நீரில் தொடங்கி நெருப்பில் முடிகிறது. நெருப்பெழுந்ததுமே இதோ என்று எல்லை கண்ணுக்குப்பட்டுவிட்டது, அவ்வளவுதான்

ஜெ