Saturday, January 31, 2015

அழகிய நிலங்கள்


[பெரிதாக்க படம் மீது சொடுக்கவும்]

ஜெ சார்

மழைப்பாடலை இப்போதுதான் வாசிக்கிறேன். அர்ஜுனன் பிறந்த சமவெளியின் அழகை வாசிக்க வாசிக்க கனவில் இருப்பதுபோல இருக்கிறது. பர்ஜன்யபதம் என்று சொல்லச் சொல்ல அந்தக் கனவு. உடனே கிளம்பி வடக்கே போய்விடவேண்டும் போல் இருந்தது. இடியின் பாதை. மின்னலின் பாதை. மழையின் பாதை. மழை மலையிறங்கிவரும் வழி. அற்பிதமான சித்தரிப்பு சார்

ஆனால் இனிமேல் இத்தகைய அழகான நிலவர்ணனைகள் வரமுடியாதே  என்ற நினைப்பும் வந்தது. இனிமேல் பான்டவர்கள் கஷ்டப்படுவதும் கடைசியில்போரும்தானே என்றும் தோன்றியது. ஏக்கமாக இருந்தது

சித்ரா

அன்புள்ள சித்ரா,

இனிமேலும் பல வித்தியாசமான விபரீதமான நிலக்காட்சிகள் வரக்கூடும். மகாபாரதத்தின் உட்பகுதி என்பது அர்ஜுனனின் சாகசங்களால் ஆன பயணங்கள் கொண்டது. கிட்டத்தட்ட இலியட்ம் போல

ஜெ