Friday, January 30, 2015

பசித்திருப்பவர்



ஜெ

பிரயாகையை இடைவெளிவிட்டு வாசித்து முடித்தேன். இந்நாவல்களில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டே வரும் கதாபாத்திரம் என்றால் அது சகுனிதான் என்ற எண்ணம் வந்தது. சகுனியின் முகம் அமைதியும் ஆசையும் கொண்ட இளவரசனாக மழைபாடலில் வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அது மாறி இன்றைக்கு ஒரு பசித்த பாலைவன ஓநாயாக மாறியிருக்கிறது

அவரது மாற்றம் அஸ்தினபுரியை அழிவுக்குக் கொண்டுசெல்கிறது. காலேஜில் படித்த ஒரு நாடகத்தின் தலைப்பு man of destiny விதியின்மனிதன் என்று. சகுனிதான் விதியின் முகமாக இந்த  நாவல்களில் வந்துகொண்டே இருக்கும் கதாபாத்திரம் என்று நினைத்துக்கொண்டேன். அவரது முகம் கனவுகளிலே கூட வருகிறது

அந்த ஓநாய்க்கும் அவருக்குமான உரையாடல்தான் பிரயாகையிலேயே உச்சமான இடம் என்ற எண்ணம் வாசித்துமுடித்ததுமே வந்தது. அவரில் இருந்துதான் எல்லாமே ஆரம்பிக்கின்றன. அந்த கணிகர் கூட சகுனியின் ஒரு brewed essence தானோ, அவர் உண்மையிலே இல்லையோ இவருடைய imagination மட்டும்தானோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது

ராஜாராம்