Wednesday, January 28, 2015

திருமகள்




ஜெ,

தலைப்பே அடுத்த நாவலின் கரு என்ன என்பதைச் சொல்லிவிடுகிறது. இந்திரப்பிரஸ்தத்தை இந்திரனின் நகரமாக அதாவது களியாட்டங்களின் நகரமாக உருவகிக்கிறீர்கள் என நினைக்கிறேன். சரிதானே?

இந்திரநகரியின் தலைமையில் திரௌபதி இருக்கிறாள். இந்திரன் மாறுவான் இந்திராணி மாறுவதில்லை என்று ஒரு சொல் உண்டு. இவளும் ஐந்து இந்திரர்களுக்கு ஒரு இந்திராணிதானே?

இந்திராணி லட்சுமி அம்சம் உள்ளவள். அர்ஜுனன் திரௌபதியைக் காண்பது லட்சுமி கோயிலுக்குச் செல்லும் வழியில் என்பது அந்த வகையிலே அர்த்தம் மிகுந்ததாகத் தோன்றியது

ஐந்து துதிக்கைகள் கொண்ட வெள்ளையானையாகிய ஐராவதமும் நெஞ்சில் நிழலாடியது.

இந்திரநகரில் ஆட்சிசெய்யப்போகும் திருமகளான இந்திராணியை எதிர்பார்க்கிறேன்

சுவாமி