Thursday, January 29, 2015

பெண்களின் வருகை



அன்புள்ள ஜெமோ

மழைப்பாடலில் நான்கு நகர்நுழைதல்களை ஒப்பிட்டுப்பார்த்து வாசித்துக்கொண்டிருந்தேன். சகுனி நுழைவது தீ உள்ளே நுழைவது போல இருக்கிறது. அதற்கு முன்னால் ஒரு பெருவெள்ளம் வந்தது போலவே அதுவும் இருப்பதாகக் காட்டப்படுகிறது

அதற்குமுன்னால் காந்தாரி. அவள் வருவதற்கு முன்னாலேயே ரத்தமழை பெய்துவிடுகிறது. ஏற்றித் தயார்நிலையில் வைக்கபபட்ட ஆயுதங்கள் மேல் மழைபெய்து அவைகள் ரத்தத்த்துளிகள் சொட்டுகின்றன. காந்தாரி உள்ளே வரும்போது மக்கள் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கிறார்கள். மழையில்லாமல் காய்ந்து கிடந்த அஸ்தினபுரிக்கு போதும் போதும் என்பதுபோல மழை. அவர்கள் மழையிலேயே இறங்கி அஸ்தினபுரிக்குள் செல்வது அற்புதமான காட்சியாக இருந்தது. இப்போதும் கனவுபோல ஞாபகம் வருகிறது

அதற்குப்பின்னால் குந்தி. அப்போது இளமழை.அவளுக்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆகவே அவளை அவளே நிமிரச்செய்து கம்பீரத்தை த்ருவித்துக்கொண்டு போகிறாள். அங்கேதான் அவளுடைய மனக்குறைகள் எல்லாமே தொடங்கியிருக்கவேண்டும்

அதற்கு முன்னால் அம்பாலிகையும் அம்பிகையும் வ்ந்தபோது வேறுமாதிரி நிகழ்ச்சி. அம்பாலிகை ஒரு வெள்ளைப்பூவை பறித்து கையில் வைத்திருக்கிறாள்

ஒவ்வொரு பெண்ணாக உள்ளே வந்துகொண்டே இருக்கிறார்கள். இனி வரப்போகிறவள் பாஞ்சாலி

சிவராமன்.