Tuesday, January 20, 2015

எரியுடன் எழுந்தவள்



இனிய ஜெயம்,

பந்தங்களின் வெளிச்சத்தில் வெள்ளிச்சிற்பங்களில் பொன்மின்ன, செந்நிறத் திரைச்சீலைகளில் தழல்நெளிய, இரட்டைக்குதிரைகள் இழுத்த அரசரதம் வந்து சகட ஒலியுடன் நின்றது. கடிவாளம் இழுபட்ட குதிரைகள் பற்கள் தெரிய தலைதிருப்பி விழித்த கருங்கண்களில் பந்தச்சுடர்களை காட்டின.   எத்தனை இறுக்கமான , செறிவான, கச்சிதமான வார்த்தைகளால் ஆன வர்ணனை.

கர்ணனின் கவசமும் குண்டலங்களும்  ஒவ்வொரு தருணமும் காண்போர்  அகத்தின் ஒவ்வொரு நிலையை பிரதி பலிப்பது போல, பிரயாகை நெடுகிலும் வரும் துருவ நட்சத்திரம்  அதன் நிலை தன்மை , ஒவ்வொருவர் அக நிலையிலும் ஒவ்வொரு அழுத்தம் கொள்கிறது.

மாயை  துருவ நட்சத்திரத்தை நோக்கும் கணம், மேலிருந்து துருவ நட்சத்திரமும் கீழே  நிகழ்ந்துகொண்டிருக்கும் அனைத்தையும் நோக்குவது போல ஒரு உளமயக்கு உருவாகி,  அனைத்தும் ஒரு முழுமையில் நின்றது.

காந்தாரி ஹச்தினாபுரி நுழைகையில் குருதி [வண்ண]மழை. திரௌபதி காம்பில்யம் நீங்குகையில் வன நெருப்பு.ஊழித் தீயின் மதலை. வினை முடித்தனள் இனியள். 

கடலூர் சீனு