Tuesday, January 27, 2015

வெளிச்சத்துண்டுகள் வழியாக...



ஜெ

வெண்முரசின் முக்கியமான சிறப்பம்சமே ஆங்காங்கே ஒரு கதாபாத்திரம் வந்து வெளிச்சத்தில் நின்றுவிட்டு இருட்டுக்குள் போய்விடுவதுதான். ஒருகதாபாத்திரம் வரும்போது மிக நுட்பமாக அதை நாம் பார்க்கிறோம். அது உடனே மறைந்து அடுத்த கதாபாத்திரம் வரும்போது நாம் முந்தைய கதாபாத்திரம் என்ன நினைக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். மீண்டும் அந்த கதாபாத்திரம் நேரில் வரும்போது அது கொஞ்சம் மாறுதல் அடைந்திருக்கிறது. அந்த மாறுதல் ஏன் நடந்தது என்பது நமக்கு புதிராக இருக்கிறது. அதை ஊகிப்பதுதான் வெண்முரசின் பெரிய சவால் என்று நினைக்கிறேன்

திருதராஷ்டிரன் வந்து வந்து போவதை வைத்து நானே அவரைப்பற்றி ஒரு அருமையான மனச்சித்திரத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன். அவர் மூர்க்கமானவர். அன்பானவர். மகன்களிடம் பெரும்பாசம் கொண்டவர். தவறுகளை ஏற்காதவர். தம்பியிடம் பெரும் பாசம் வைத்திருக்கிறார். ஆனால் ஒரு தாழ்வுணர்ச்சி அவரிடம் இருக்கிறது. கண் தெரியாதவர் என்பதனால். ஆகவேதான் சோதிடர்க்ள் சொன்னபோதும் அவரால் மகனை விடமுடியவில்லை.

இந்த அம்சம்தான் அவர் தன் மகனை நியாயப்படுத்தும் இடம் வரைச் செல்லவைக்கிறது என்று நினைக்கிறேன். அந்த அஸ்திவாரம் முன்னாடியே போட்டுவைத்திருக்கிறது

பிரபா சுந்தர்