Thursday, November 29, 2018

அங்கதம்




அன்புள்ள ஜெ

வெண்முரசில் இருவகைச் சூதர்கள் வருகிறார்கள். கதைசொல்லிகள். இளிவரலுரைப்பவர்கள். அங்கதச்சூதர்களின் பேச்சுக்கள் நேரடியாக அங்கதமாகவும் இருப்பதில்லை. அவர்கள் என்ன சொன்னார்கள் என்று சரியாகப்புரியாமல் , இதில் அப்படியொன்றும் தவறில்லையே என்று சொல்லும்படியாக உள்ளன. கேலிக்கூத்தாக இல்லை. கிளாஸிக்கலான ஒர் ஒருமை அவற்றில் உள்ளது

தானே உருவாக்கிய பிரச்சினைகளிலிருந்து பிறரைக் காப்பவர் என்று முதற்கனலில் வரும் சூதர் பீஷ்மரை வர்ணிக்கிறார். அவருடைய பேரர் அவரை பெரியவிஷயங்களைச் செய்யத் தொடங்கியதாலேயே பெரியவராக ஆனவர் என்கிறார். இரண்டும் நஞ்சு தோய்ந்த விமர்சனங்கள். ஆனால் மென்மையாகச் சொல்லப்படுகின்றன

அந்தக்காலத்தில் அரசர்களிடம் அங்கதமாகப் பேசும்போது இப்படித்தான் மென்மையான பூச்சாகச் சொல்லவேண்டும்போலிருக்கிறது

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்

இன்றும் கேரளத்தின் அங்கதகலையான சாக்கியார் கூத்தின் சாக்கியாரின் நகைச்சுவை மிகப்பூடகமானதாகவே இருக்கும்

ஜெ