Friday, November 16, 2018

எட்டு வசுக்கள்



அன்புள்ள ஜெ

சிகண்டியை நோக்கி பீஷ்மர் வில் தாழ்த்துவார் என்பது தெரியும். அது கடைசிநாளில்தான் நிகழும் என நினைத்திருந்தேன். ஆனால் இப்போதே வந்துவிட்டது. ஆச்சரியமாக இருந்தாலும் பின்னர் தோன்றியது இதுவே சரி என்று. கடைசிநாளில் அவர் வில்லெடுத்திருக்கவே மாட்டார்

பீஷ்மர் இரண்டுமுறை வில்தாழ்த்தினார் என்பதுதான் மகாபாரதம். கிருஷ்ணன் முன் ஒருமுறை, சிகண்டிமுன் ஒருமுறை. அதை எட்டுமுறையாக சுவாரசியமாக நீட்டியிருக்கிறீர்கள். எட்டுவசுக்களும் விலகுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. எட்டு வசுக்களும் விலகாமல் அவர் எப்படி தோற்கமுடியும்?

ராஜன் சிவானந்தம்