Sunday, November 11, 2018

போர்க்களம்



விஷ்ணுபுரம் விழாவிற்கு வர,   ரயிலில் பயணச்சீட்டு ஏற்கனவே பதிவு செய்து விட்டேன்..

அடிக்கடி கடித தொடர்பில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்..ஆனால், முக்கியமில்லாத கடிதங்கள் எழுதி உங்கள் நேரத்தை வீணடித்து விடுவோமோ என்று ஒரு தயக்கம் எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது..

வேலை சலனங்களினால், வாசிப்பு நேரமும் கூடி குறைகிறது (திருநெல்வேலி பயணமும் பதிவு செய்து பின் விலக வேண்டியதாயிற்று) .. வெண்முரசு மட்டும் தடை இல்லாமல் வாசித்து விடுகிறேன்!! சமீீபத்தில்  போரும் அமைதியும் வாசித்திருந்ததால், இரண்டையும் ஒப்பு நோக்காமல் ( போருக்கு தயார் ஆதல், போர் விவரணை..) இருக்க முடியவில்லை. வெண்முரசு , போரும் அமைதியுமை விட பிரம்மாண்டமான தளத்திற்கு சென்று விட்டது என்று தான் நினைக்கிறேன்..

வெண்ணிமலை