Sunday, November 18, 2018

பீமனின் முகம்


ஜெ

விசோகனின் பார்வையில் வரும் பீமசேனர் வேறுமாதிரி இருக்கிறார். அவர் தந்திரமாகவும் சூழ்ச்சியாகவும் செயல்படுகிறார். ஜெயிக்க்கமுடியாது என்று தோன்றும்போது பின்வாங்கிவிடுகிறார். அவர் ஒரு தந்திரமான காட்டுவிலங்கு போலிருக்கிறார். விசோகனுக்கு அதெல்லாம் தப்பாகத்தெரியவில்லை. ஆனால் அவர் அதைச்செய்வதை அவன் கவனிக்கிறான். அணுக்கமான சேவகனின் பார்வையே வேறுதான்

எஸ்.நாதன்