Thursday, November 22, 2018

சொல் அவிதல்



அன்புள்ள ஜெ

சிகண்டி பற்றி “எந்தைமுற்றாக அகச்சொல் அடங்கியவர்என்று அன்னைசொல்லியிருக்கிறார்” என்று பேசிக்கொள்கிறார்கள். 

ஆனால் உண்மை என்ன? சிகண்டி பீஷ்மர் அர்ஜுனன் வியாசர் யமன் என்று எல்லாருமே அகக்குழப்பங்கள் கொண்டவர்களே. அவர்களது தெளிவின்மை எண்ண ஓட்டங்களாகவே உள்ளது. இமைக்கணத்தில் அது பேசப்படுகின்றது. 

ஆம் மற்றவர்களின் எளிய உலகியல் குழப்பங்கள் இவர்களுக்கு இல்லை, அதனால் இவர்கள் முற்றும் அடங்கிய முனிவர்களாகவே தோற்றமளிக்கின்றனர். ஆனால் இவர்களின் எண்னங்கள் வேறொரு தளத்தில் அலைபாய்கின்றன. 

கிருஷ்ணன் கூட இதையெல்லாம் கடந்து வந்தவன் என்கிறது வெண்முரசு.

மது