Monday, November 26, 2018

ஐவருக்கு தேவி

அன்புள்ள ஜெ

பிரயாகையில் திரௌபதி சுயம்வரம் வாசித்தேன். அந்த நிகழ்ச்சியின் பல படிகளை அற்புதமான ஒருமையுடன் சொல்லியிருக்கிறீர்கள். ஒரு நவீன நாவலில் இப்படி ஒரு வாசிப்புக்கு இடமிருப்பது ஆச்சரியமளிப்பதுதான். நவீனநாவல் இதற்கெல்லாம் இடமளிக்காது என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது


சீதையாகப்பிறந்தவளும் ராதையாகப்பிறந்தவளும்தான் திரௌபதியாகப்பிறந்து ஐவரை மணக்கிறாள். ஐவரும் ஐந்து பாவங்கள்தானே?

சங்கர்