Tuesday, November 13, 2018

உடன்பிறந்தார்


அன்புள்ள ஜெ

பிரஹத்பலனின் சோர்வுக்கான காரணம் என்ன என்று அறிகையில் கதை மேலும் விரிவடைகிறது. இப்படி களத்தில் நின்றிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒரு போர்தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் அதை நிகழ்த்துவதற்கு தங்களுக்குரிய காரணம் இருக்கிறது. இந்த அத்தியாயத்தை வாசித்தபோது ஏற்கனவே விந்தனும் அனுவிந்தனும் பேசிக்கொண்டதை வாசித்துப் பார்த்தேன். அவர்களுக்கும் வேறு கதை இருக்கிறது. அவர்களும் பிரகத்பலனும் பேசிக்கொள்ளும்போது அதுவரை இல்லாத இன்னொரு கதை உருவாகி வருகிறது இரண்டுமே சகோதரர்களின் கதைகள்தான் இரண்டு வகையிலே

அர்விந்த்