Wednesday, November 21, 2018

கர்ணனின் மைந்தர்



அய்யா:
          
நான் தாங்கள் வெண்முரசு நாவலை தொடர்ந்து வாசிக்கின்றேன் .
உங்கள் போர் வர்ணனை மிகவும் நன்றாக இருக்கிறது. பாண்டவ மைந்தர்கள் வீர சாகசங்கள் நன்றாக இருக்கிறது. இதில் கர்ணன் மைந்தர்கள் பற்றிய தகவல்கள் இல்லை. அவர்கள் போரில் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய ஆவல் கொண்டுள்ளேன்.

நன்றிகளுடன்


பரிதி

அன்புள்ள பரிதி

அவர்களும் களத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால் படைமுகப்பில் அனுமதிக்கபப்டவில்லை. படைத்தலைமையும் கொள்ளவில்லை

கர்ணன் வந்தபின்னரே அவர்களைக் கொண்டுவரவேண்டும் என நினைக்கிறேன்

ஜெ