Wednesday, November 14, 2018

போரில்



அன்புள்ள ஜெ

சக்ரதனுஸ் இந்தப்போரில் எப்படி மாட்டிக்கொண்டான் என்று சொல்லுமிடம் மிக யதார்த்தமாக இருந்தது. சக்ரதனுஸுக்கு இந்தப்போரில் ஈடுபட எந்த காரணமும் இல்லை. ஈடுபடும் நோக்கமும் உண்மையிலேயே கிடையாது. ஆனால் சும்மா இந்த விளையாட்டைப்பார்க்க ஆரம்பிக்கிறான். மானசீகமாக விளையாட ஆரம்பிக்கிறான். நேரில் விளையாடியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் வந்துவிடுகிறது. அவ்வளவுதான் அழிந்துவிடுகிறான். அந்த அழிவுதான் அவனை ஈர்த்து உள்ளே கொண்டுவந்து இப்படிச் சிக்கவைத்திருக்கிறது. அந்த ஊழின் அழைப்பை அவனால் தடுக்கமுடியவில்லைcuriosity killed the cat என்ற வரி மிக ஆழமானது

செல்வா