Thursday, November 15, 2018

க்ஷேமதூர்த்தி



அன்புள்ள ஜெ

எந்தப்போரிலும் க்ஷேமதூர்த்தி மாதிரியானவர்கள் இருப்பார்கள். அலைமோதிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு தேவையானது சுயநலம்தான். ஆனால் அதை தெளிவாக முடிவெடுக்கவும் அவர்களால் முடியாது.அவர்களை ஒருவகையான நகைச்சுவைக்காரர்கள் என்று சொல்கிறோம். ஆனால் பெரும்பாலான கிரைஸிஸ்கலில் இவர்கள்தான் முக்கியமான ஆட்டக்காரர்கள்.

இந்திய அரசியலில் ஜெகஜீவன்ராம் இப்படி பெயர் வாங்கியவர். இவரை ஆயாராம் காயாராம் என்று சொன்னார்கள். அதன்பின்னர் ராஜ்நாராயணன் சரண்சிங் கூட்டணி. அதன்பின்னர் தேவிலால் சந்திரசேகர் கூட்டணி. இவர்களெல்லாருமே இந்திய  அரசியலை ஆட்டிவைத்திருக்கிறார்கள்


தொழிலிலும் இதேபோன்றவர்கள் உண்டு. இவர்களிள் பெரும்பாலானவர்கள் எப்போதுமே தோல்விதான் அடைவார்கள். ஆனால் கேம்பிளேயர்ஸ் எப்போதுமே இவர்கள்தான்


எம்.மகாலிங்கம்