Wednesday, November 21, 2018

காத்திருப்பு




அன்புள்ள ஜெ

துரியோதனனும் பீமனும் போரிடும்போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வரும்காட்சி வண்ணக்கடலில் அவர்கள் இருவரும் நேருக்குநேராக வந்துசெல்லும் ஒரு காட்சி. இருவர் உடலிலும் கைகளாக அமைந்திருந்த நாகங்கள் நெளிகின்றன. இனி போர்க்களத்தில் என அவை சொல்லிக்கொள்கின்றன. அவர்கள் அதன்பின் போரிடவே இல்லை. குருக்ஷேத்திரத்தில் அவர்கள் நேருக்குநேர் சந்தித்துக்கொள்கிறார்கள். இத்தனைகாலம் நாகங்கள் காத்திருந்தன

செல்வா