Sunday, November 18, 2018

மூதாதை



ஜெ

பீஷ்மரின் மரணம் நெருங்கிவருகிறது. அதை பலகாலமாகவே எதிர்பார்த்திருந்தோம். ஆனாலும் அது மனதைக் கொந்தளிக்கச் செய்கிறது. எதிர்பார்த்திருந்தாலும்கூட துக்கமானது. மகாபாரதத்திலேயே மிகமிக மெஜெஸ்டிக்கான கதாபாத்திரம் அதுதான். களத்தில் ஒரு மூதாதை வந்து நின்றிருப்பது அது. எந்தப்போரிலும் அப்படி ஒரு மூதாதை வந்து நின்றிருப்பார். அவரைக் கொன்றபின்னர்தான் நாம் ஜெயிக்கமுடியும். என் தொழிலிலும் நான் ஒரு பீஷமரை வீழ்த்தினேன். அநியாயமாக வீழ்த்தவில்லை. ஆனால் வீழ்த்தவேண்டியிருந்தது. அப்போது மனம் வருந்தியது. இன்றைக்கு அதை நினைத்துக்கொள்கிறேன்

ஆர்