Friday, November 30, 2018

வீரகதைகள்





அன்புள்ள ஜெ

சூதர் சொல்லும் ஒரு வரியில் பீஷ்மரின் படுகள வர்ணனை முடிவடைகிறது. நாங்கள் வீரகதைகளைப் பாடவிரும்புகிறோம். அதன்பொருட்டு தலைமுறை தலைமுறையாக வீரர்களைப் போர்க்களத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறோம் என்கிறார்

இது இன்றைக்குவரை இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஏராளமான இளைஞர்கள் இன்று வெவ்வேரு வன்முறை அமைப்புக்களில் சேந்து உயிர்விடுவதற்குக் காரணம் வீரத்தைப்போற்றும் பொய்யான புகழுரைகள்தான்.

எங்கள் நாட்டில் வீரகதைப்பாட்டுக்களை எழுதிய கவிஞர்கள் நலமாக உள்ளார்கள். சிலர் இந்தியாவில் எல்லாவற்றையும் மறந்து சௌகரியமாக வாழ்கிறார்கள். அதைக்கேட்டு களத்துக்குப் போய் உயிர்விட்ட இளைஞர்களின் அம்மாக்கள்தான் நடைபிணங்களாக வாழ்கிறார்கள்

உமாபதி