Monday, November 12, 2018

தேவர்கள்




அன்புள்ள ஜெ
 https://www.jeyamohan.in/114639#.W-LaZdUzbIU

தேவர்களின் வடிவங்கள் மனிதனால் உருவாக்கப்படுபவை. தேவர்கள் வெறும் எக்ஸிஸ்டென்ஸ் மட்டும்தான். அவர்களின் வடிவம் நாம் அளிப்பது. இதுதான் எங்கள் யோக வகுப்பில் சொல்லித்தரப்படுவது. இந்த அத்தியாயத்தில் தேவர்களின் போர்க்கருவிகள் நம்மிடமிருக்கும் வீட்டுக்கருவிகள் வேலைக்கருவிகள் எல்லாம்தான் என்ற வரி ஒரு அற்புதமான கற்பனை. நாம் அவர்களிடமிருந்து அந்த வடிவங்களை பெற்றிருக்கலாம். அல்லது அவர்களுக்கு அந்த வடிவங்களை நாம் அளித்திருக்கலாம். நாம் இங்கே வைத்திருக்கும் எல்லாவற்றுக்கும் அவர்கள் உலகில் வேறு அர்த்தங்கள் இருக்கலாம். ஆச்சரியமான ஒரு கற்பனையாக அதை நினைக்கிறேன்

சத்ய நாராயணன்