Saturday, September 27, 2014

கண்ணனின் குழல்




ஜெ சார்

நீலம் வாசித்து முடித்து நிறைவடைந்த மனதுடன் இதை எழுதுகிறேன். இரண்டு பேர் நாவலில் வந்தார்கள். ஒன்று கண்ணன். நீலமணி வண்ணன். இன்னொருவர் கிருஷ்ணன். ராதையின் கண்ணன் ஒரு தென்றல். கிருஷ்ணன் ஒரு புயல். கிருஷ்ணன் சொல்லும் தத்துவங்கள் [ இந்திரனைப்பற்றி] கண்ணன் சொல்லமுடியாது. கண்மலர்ந்து சிரிக்கத்தான் முடியும். கண்ணன் குழலூதுபவன் . கிருஷ்ணன் கீதை சொல்பவன். இருவருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இருபகுதிகளும் சொல்லிக்கொண்டே வந்தன. இரண்டு பேருமே வளர்ந்து உச்சம் அடைந்தார்கள். கண்ணன் ராதையுடன் உறவுகொள்ளும் அத்தியாயத்தில் முழுமை அடைகிறான். கிருஷ்ணன் மதுராவை ரத்தத்தால் கழுவும்போது முழுமை அடைகிறான்

ஆனால் இன்றைய கடைசி அத்தியாயத்தில் இருவரும் ஒன்றாக ஆகிறார்கள். கீதை சொன்ன கிருஷ்ணன் குழலை கொண்டுவா என்கிறான். அவன் குழலூதுவான் என்பதே அங்கே எவருக்கும் தெரியாது. ராதை முன் நின்று ஊதும்போது அப்படியே அவன் கண்ணனாக மாறிவிடுகிறான். கிருஷ்ணனை விட கண்ணன் ஒருபடி மேலே என்ற ஆசிரியரின் எண்ணமும் அதிலே தெரிகிறது. அதுதான் என் எண்ணமும்

மகாதேவன்