Wednesday, September 24, 2014

தெய்வீக காமம்





அன்புள்ள ஜெ,

பதினாறு உபச்சாரங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அதிகாலையின் அம்மன் போல ‘நிர்மால்யம்’ கொள்ளச்செய்வதில் தொடங்குகிறது. விழிசுடர்ந்து கை அருளி அவள் நிற்கும் இடம் வரை தெய்வத்தின் முன் அவன் அர்ச்சகன். அதன்பின்  தலை எடுத்து தாம்பூலத்தில் வைக்கிறான். அமுதப்படையல் அவனே தான். அதன்பின் தாம்பூலம் என்பது அவனும் தெய்வமாக அவளுக்கு சமானமாக நின்று அளிப்பது. செவியில் விண் ஏற்றும் மந்திரம் சொல்கிறான்.

நம்முடைய நீண்ட மரபில் இருந்து வரும் இந்த உணர்வுநிலையை ஒருவகை divine erotica என்றுதான் சொல்லவேண்டும்

கருணாகரன்