Saturday, September 27, 2014

ஒருங்கிணைவு




ஜெ
நீலம் முடிந்தபிறகு முடிந்துவிடக்கூடாதே என்று நான் மீண்டும் பழைய அத்தியாயங்களையே வாசிக்க ஆரம்பித்தேன். ஆறாவது அத்தியாயத்தில் வாசுதேவர் சொல்கிறார்
இத்தனை குருதியில் பிறந்த அவனே இந்த யுகத்தின் அதிபன். அவனாடும் ஆடலென்ன என்று அவனே அறிவான். தன்னை நிகழ்த்தத் தெரிந்த தலைவன் அவன். இதோ, உம் நெஞ்சில் அச்சமாகவும் உம் தம்பியர் படைக்கலங்களில் வஞ்சமாகவும் அங்கே நகருறையும் அன்னையர் கண்களில் கண்ணீராகவும் அவர் தந்தையர் நெஞ்சில் பழியாகவும் விளைபவன் அவனே.”

அந்த வரிகளை அப்போது வாசித்தபோது ஒரு குறிப்புணர்த்துதல் மாதிரித்தான் இருந்தது. அதோடு அப்போது மனசு ராதையில் இருந்தது. ராதையின் பகுதிகளை வாசித்து ஒரு போதை இருந்தது. இந்தப்பகுதிகளிலே வரும் கதையை வாசிக்கும்போது ஒரு மனசு ஒன்றுதலில்லாத நிலைமை கொஞ்சமாக இருந்தது

ஆனால் இன்றைக்கு வாசிக்கும்போது, அதாவது மதுரையில் கிருஷ்ணன் பேசிய பேச்சையும் மதுரையில் ரத்தம் ஓடியதையும் எல்லாம் அறிந்தபிறகு இதை வாசிக்கும்போது மனசு பொங்கி கண்ணீர் வந்துவிட்டது. 

“பொன்முடிகொண்டு பிறக்கவில்லை. பெரும்புகழ்கொண்டு பிறக்கவில்லை. பொல்லாப்பழிகொண்டு பிறந்திருக்கிறான்! பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்! எழுக! எழுக என் தெய்வம்! எழுக!” 

ஆனால் அப்போதே கம்சன் மோட்சமடையும் விதமும் உங்கள் மனசிலே இருந்திருக்கிறது. மிகச்சரியாக அது அப்போதே சொல்லப்பட்டிருக்கிறது.

“வாளேந்திய பேதை! ஆனால் அவன் காலடியில் நெஞ்சுபிளந்து படைக்கும் பெரும்பேறுபெற்றோன்! வாழ்க! உன் பெயர் என்றும் இப்புவியில் வாழும்!”  

இந்த பெர்பெக்‌ஷனை நினைத்தால்தான் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு திட்டமிட்டிருந்தால் இதை எழுதியிருக்கமுடியும் என எண்ண எண்ண மலைப்பாக இருக்கிறது

தியாகராஜன்


அன்புள்ள தியாகராஜன்

திட்டமிட்டிருந்தால் எழுதியிருக்கவே முடியாது

ஜெ