Tuesday, September 23, 2014

மணிரத்னம் கடிதம்



ஜெ,

புதிய படவேலைகளில் இருந்ததனால் வெண்முரசு தொடர்ச்சியாக வாசிக்கவில்லை. தனா சொல்லி நீலத்தின் 32,33 ஆம் அத்தியயாங்களை இப்போது வாசித்தேன். JUST OUTSTANDING.

அற்புதம். மாயம் நிறைந்த வார்த்தைகள். ,மாயம் நிறைந்த மொழிநடை. ராதையின் வழியாக வரும் கண்ணன் மிகமிக அற்புதமான சித்தரிப்பு

உங்கள் பணி என்னையும் மிகவும் பெருமிதம் கொள்ளச்செய்கிறது

INSPIRING. 


மணி ரத்னம்


அன்புள்ள மணி,

நன்றி. ஒரு வகை பெருமிதத்தை உணர்ந்தேன்.

ஜெ