Saturday, September 27, 2014

தேன்கடல்




இனிய ஜெயம்.

நீலத்தின் இறுதி அத்யாயம்  ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கண்ணனின் குழலிசைக்காகவே  ராதை இத்தனை வருடம்  கல்லாய் உறைந்திருந்தாளா?

மரண நொடியை முன்னுரைத்தனுக்கும் கொடை செய்கிறான் கண்ணன்.

மீண்டும் கண்ணன் கை வந்து சேர்ந்தது, ராதை வசமே கண்ணன் விட்டு சென்ற குழல்.

இசைக்காத குழல். வைத்திருந்து  காத்திருந்து கல்லென உறைந்த ராதை. கண்ணனற்ற ராதை.

குழலை கண்ணன் வசம் சேர்க்கும் குட்டி ராதை. அவள் அக் குழல் வழி கேட்கும் முதல் இசையிலேயே  முக்தி எய்தி விடுகிறாள். [ குழல் இசைக்க,கல்லாலான ராதை உயிர் கொள்ளும்போது, உயிர் உள்ள ராதை முக்திதானே எய்துவாள்]  

 அந்த ராதை  மதலைக் கண்ணனின் சிறு பாதங்களை முதலில் காண்கிறாள். இந்த ராதை  முதிய கண்ணன் சிரசு சூடிய பீலி முதலில்  காண்கிறாள்.

கண்ணனை  பாதாதி கேசம் காண ராதைக்கு பிறவிகள் தேவைப் படுகிறது.

தேன் கடலில் விழுந்து சாகும் பட்டாம்பூச்சிகள்.

கடலூர் சீனு